செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஒரு பெண்ணின் உணர்வுகள் !

You are person read this...

நானும் ஒரு பெண்
ஆனால்
எனக்குள்ளும் உணர்வுகள்
இருக்கிறது
என்பதை
இன்னும் ஏன் நீங்கள்
புரிந்து கொள்ளவில்லை ?

என் வெள்ளைத் தோலை
உற்று நோக்கும்
வெட்கம் கெட்ட
மனிதர்களே !

எனக்குள் ஒழிந்திருக்கும்
வெள்ளை இதயத்தின்
விசும்பல்களை
அறிவீரோ ?

பளிச்சிடும் மேனி ;
பருத்த தொடை ;
பட்டுக் கன்னம் ;
பரிமளிக்கும் கூந்தல் ;
சிறுத்த இடை ;
பெருத்த தனங்கள் ;
இவை இருந்தால் தானே
உங்கள் அகராதியில்
எனக்கு பெண்
என்று பெயர்

உங்கள் கண்ணுக்குத்
தெரிவது
என் புற அழகு
மட்டும் தான்

கால் நடைகளைப் போல
கீழ்த்தரமாக
எங்கள் இனத்தை
அடக்கியாள நினைக்கும்
ஆண் வர்க்கத்துக்கு
ஒன்றை மட்டும்
உரத்து சொல்ல விரும்புகிறேன்

நாங்கள் பூப் போல
மென்மையானவர்கள் தான்
வன்மையும்
எங்களுக்குள் குடியிருக்கின்றது
ஜாக்கிரதை !


குறிஞ்சிக் கவி செ.ரவிசாந்

1 கருத்து:

நம்பள்கி சொன்னது…

இதில் தவறு பெண்கள் மீதும் இருக்கிறது. கருப்பாக இருக்கும் பெண்களை கேலி செய்வதே கொஞ்சம் கருப்பில்லாத பெண்கள் தான் (இந்தியாவில் எல்லோரும் கருப்பு தான்)