வியாழன், 12 ஜனவரி, 2012

போர் வெறி நீங்கவே பொங்கட்டும்..!!


புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்

மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்
மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்

ஒற்றுமையுடன் இருக்கவே பொங்கட்டும்
ஓரணி சேரவே பொங்கட்டும்

சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்
சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்

பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமி எங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்.

என் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...

-குறிஞ்சிக்கவி செ: ரவிசாந் -