சனி, 14 ஏப்ரல், 2012

சித்திரையாளே சிரித்து வாடி.....!

You are person read this...


நிலத்தில் எம் வாழ்வு
நிலையான அமைதி
கொள்ள
இத்தரை எங்கும்
இன்பம் வழிந்தோட
சித்திரையாளே
சிரித்து வாடி !

வேற்றுமைகள் நீங்கி
ஒற்றுமை தலைத்தோங்கிட
வேதனையில் உழலும்
சொந்தங்கள் வாழ்வில்
விடியலைத் தர
''நந்தன'' எனும்
பெயர் குடி
சித்திரையாளே
சிரித்து வாடி !

மனைகள் எங்கும்
மங்களம் தித்திக்க
வழிமறிக்கும் தடைகள்களை
உடைத்து
வாழ்வில் முன்னேற
புத்தாடை புனைந்து
புதுமைகள் பல படைக்க
வரம் ஒன்று வேண்டிக்
கரம் கூப்பி நிற்கின்றோம்
சித்திரையாளே
சிரித்து வாடி !

காதலுறு உள்ளங்கள்
கனிப்புடன் கரம் பற்றிட
கருணை காருண்யம்
மனமெங்கும் கரை புரண்டோட
வறுமை பிணிகள் நீங்கி
வாழ்வில் வசந்தங்கள் மலர
இளவேனிற் காலத்து
இளங்கன்னி
சித்திரையாளே
சிரித்து வாடி !

கருத்துகள் இல்லை: