வியாழன், 24 டிசம்பர், 2009

வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!


அழியாத அன்பொன்றே நட்பு
அன்பான புரிதல் தானே நட்பு
களங்கமில்லாத அன்பே நட்பு- அதைக்
காதலித்தால் வாழ்வே பொற்பு.

காலமெல்லாம் எமை இணைக்கும் நட்பு
கைகோர்த்துக் கடைந்தேறும் நட்பு
மனச்சுமையை இறக்கி வைக்கும் நட்பு
மாசில்லா உந்தன் நெஞ்சு தான் என் தெம்பு.

உள்ளத்து உணர்வொன்றே நட்பு
உயிரெல்லாம் கலந்ததுவே உன் நட்பு
வெள்ளம் போல் வரும் வேதனையை
விடியலாக்கித் தருமந்த நட்பு.

விளைகின்ற பயிராக வளர்கின்றதே உன் நட்பு
வாசமுள்ள பூவெல்லாம் பேசுமுந்தன் நட்பு
வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!