செவ்வாய், 15 செப்டம்பர், 2009

உலகுக்கு ஒளி தருவாயா ஒபாமா!


காலமெல்லாம் கடைத்தேற முடியாத

கறுப்பின மனிதரைக்

காத்திடவென்று பிறந்த

மார்ட்டின் லூதர் கிங் போல்

மால்கம் எக்ஸ் போல்

மார் தட்டிக் கறுப்பினம் மகிழவென

பாரினில் வந்துதித்த ஒபாமாவே

உன்

கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்கும்

ஒடுக்கப்பட்ட சிறு இனங்கள்

உன் வரவில் களிப்படைகிறதே

காத்திடுவாய் என்று காத்திருக்கும்

கடைத்தள்ளிய மக்களனைவரினதும்

கனவுகள் நனவாகும்

ஒரு நாள் நீ அரங்கேறிய திருநாள் அன்று

விழி பூத்திருக்கும் எங்களுக்கு

ஒளியூட்டுவாயோ இல்லை

வெள்ளினம் போல் நீயும் திரும்புவாயோ

ஆப்ரகாம் லிங்கனை அடியொற்றி

அரசேறும் உன் பாதை

மக்கள் நலன் காக்க வழி சேர்க்குமா?

காப்போம் பிள்ளைகளை



வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை
உள்ளதைச் சொல்லும் நல்ல பிள்ளை
உணர்ந்தால் உலகத்தில் நல்ல உள்ளம்
உவந்தால் உன்மத்தம் ஆகும் எம் உள்ளம்
கள்ளமில்லா உள்ளத்தின் தாகம் - அதை
கண்டு தீர்ப்பது எம் விவேகம்
காயம் இல்லாத அதன் வேகம்
காப்பது நம் அனைவரது விவேகம்!

சொல்ல நினைக்கும் அவ் உள்ளத்தின்
உணர்வுகளை உணர்ந்தால் அது நம் விவேகம்
காயம் படாது காப்பது நம் கடமை
கண்ணிமை போல் பார்ப்பது நம் உடமை
பிள்ளைகளே உயர் செல்வம் உலகில் - அதை
பூரிக்கப் பார்ப்பது பெரியோர் கடமை!

அன்பினால் ஆவது எதும் இல்லை
ஆரத் தழுவி அரவணைப்பது ஏது தொல்லை?
இல்லை இல்லை உலகில் செல்வம்
உண்டு என்பது பிள்ளைச்செல்வம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அளவில்லா அன்பை கொடுப்பதே நம் கடமை
ஆசைக்கும் உண்டாமோ அளவில்
அரவணைத்தால் உணரும் அன்பு உள்ளம்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

எனது கவிதை





அன்பில் விளைவதும் கவிதை - நல்ல
அழகில் மலர்வதும் கவிதை
பண்பில் விளைவதும் கவிதை - இந்தப்
பாரில் சிறந்ததும் கவிதை.

என்றும் நிலைப்பதும் கவிதை - எழில்
கொண்டே நிகழ்வதும் கவிதை
குன்றில் வரும் அருவி போல - தொடர்
கொண்டே விளங்குவதும் கவிதை .

வாழ்வை உயர்த்துவதும் கவிதை - மொழி
வளத்தை விளக்குவதும் கவிதை
தாழ்வை அகற்றுவதும் கவிதை - நல்ல
தமிழில் அமைவது தான் கவிதை.

தேனை நிகர்த்தினிக்கும் கவிதை - மென்மைத்
தென்றல் என விளங்கும் கவிதை
வானைப்புவி அழகை எல்லாம் - என்றும்
வாரி வழங்குவது கவிதை.

காலம் கடந்து நிற்கும் கவிதை - உயர்
கருத்தை விளக்கி நிற்கும் கவிதை
ஜாலம் சிறக்க வைக்கும் கவிதை - நல்ல
நடையில் அமைவது தான் கவிதை.

கம்பனின் சொல்லில் - அன்று
மலர்ந்தது இனிமையான கவிதை
கவிஜர்கள் உள்ளத்தில் - இன்று
உதிப்பதும் கவிதை.

பள்ளிச் சிறுவனின் படிப்பிலும் கவிதை
பாவேந்தர் பாடும் பாவும் கவிதை
பரம ஏழையின் வறுமையிலும் கவிதை
பலரது மனத்தைக் கவர்ந்திடும் கவிதை.

இயற்கையின் இனிமை உதிர்வது கவிதை
ஈகையை வார்த்தையில் வடித்திடும் கவிதை
வானம் கடல் புவி அழகையெல்லாம்
வாரியெமக்கு வழங்கிடும் கவிதை.

இன்பத்தின் பெருக்கிலோ இன்பக் கவிதை
துன்பத்தின் கொடுமையில் துக்கக் கவிதை
கிடைக்காத ஒன்றிலோ ஏக்கக் கவிதை
திடீரெனக் குதிப்பது வியப்புக் கவிதை.

புலவர்கள் பாடிடும் பொருளே கவிதை
மன்னர்க்குப் புகழைத் தருவதும் கவிதை
ஆடிப்பாடும் கலையழகிலும் கவிதை
நாடி உலகம் சிறப்புறவே கவிதை.

கற்பனைத் தேரின் சிகரமே கவிதை
காவியப் பொருளின் கருவிலும் கவிதை
தரணி போற்றிடும் தமிழின் கவிதை - என்
கற்பனைத் திறனில் பிறந்திடும் கவிதை.