வெள்ளி, 15 அக்டோபர், 2010

கிரிக்கெட்டில் ஓர் முடி சூடா மன்னன்!



சுழல் பந்து வீச்சு
முரளிதரன் வாழ்வில்
இது தந்தது
மிகப்பெரும் எழுச்சி!


தொடமுடியாத சிகரங்களை
தொட்ட முதல் வீரன்
மட்டுமா எங்கள் முரளி?


கிரிக்கெட் உலகினில்
கொடி கட்டிப்பறந்ந
முதல் தமிழனும் கூட....!


தூஸ்ரா சர்ச்சையை
துணிவுடன் எதிர்கொண்டு
சோதனைக் களங்களை
சாதனைக் களங்களாக
மாற்றிக் காட்டியவன்!


சர்வதேச அளவில்
தனது அணியை
தலை நிமிரவைக்க
தூண்டு கோலாய் அமைந்த
முரளியின் உலக சாதனையை
முறியடிக்க இனி
எவரால் முடியும்?

சதத்திற்கு ஒரு சச்சின்
அதிரடிக்கு ஒரு செவாக் என்றால்
சுழல் பந்து வீச்சுக்கு உலகில்
ஒரே ஒரு முரளி மட்டும் தான்!


எங்கு பழகி கொண்டாயோ
இப்படி ஒரு வித்தையை?


எறிந்தால் போதும் ஒரே நாளில்
பல விக்கெட்டுகள் காலில்
எண்ணூறு விக்கெட்டுகள் என்ற
உனது இமாலய சாதனை
எங்கள் நாட்டுக்கு கிடைத்த
மிக பெரிய உலக அங்கீகாரம்

ஓய்வு பெறும் உன் அறிவிப்பு
உனது இரசிகர்களிடையே இதனால்
நீடிக்கின்றது ஒரு வித பரபரப்பு


கிரிக்கெட் உலகினில்
தலை சிறந்த உன் பந்து வீச்சை
மீண்டும் காண எம் கண்கள்
நீண்ட தவமிருகின்றன ...


தடைகளை தகர்த்து
தனக்கென தனி முத்திரை பதித்த
முரளியே கிரிக்கெட் சாம்ராஜியத்தில்
நீதான் என்றும் முடி சூடா மன்னன்!


கடலைகள் ஓய்ந்தாலும்
உனது சாதனைப்பயணம்
ஓயாது தொடர கோடான கோடி
உனது இரசிகர்கள் சார்பாக
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உனக்குப் பல கோடி ...


செல்வநாயகம் ரவிசாந்