வியாழன், 22 மார்ச், 2012
செல்லாத நோட்டு!
சின்னப் பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேரூந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக் கொண்டேன்...
கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்...
நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கி விட்டு
ஓட்டுனருக்கு
ரே... ரே... சொன்னார்
நடத்துனர்...
வேகமெடுத்தது பேரூந்து
பூம்.. பூம்... பூம்...
-அ. நிலாதரன்-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)