புதன், 18 மே, 2011

அழியாத ஆன்மாக்கள்...!


சின்னம் சிறு பாலகர்கள்
சிரிப்பிழந்த மழலையர்கள்
தள்ளாடிடும் முதியவர்
தாய்மை உள்ளங்கள்
என்று வாழ்வின் வசந்தங்களையே
இடையில் பறி கொடுத்த
பாவப்பட்ட மனித ஜீவன்கள்
அத்தனை பேருமே
எங்கே என்று தேடுகிறீர்களா...?

அதோ பாருங்கள்
மண்ணில் முளை விடும்
விதைகளாய்
வானில் மின்னும் நட்சத்திரங்களாய்
வலம் வருவது யார் என்று...!

எத்தனை எதிர்பார்ப்புக்களுடனும்
கனவுகளுடனும் வாழ்ந்திருப்பார்கள்...
இருந்தும் என்ன பயன்...
சொந்த நாட்டில் சுதந்திரமாக
வாழ அனுமதி
மறுக்கப்பட்ட அப்பாவிகளல்லவா
இவர்கள்...

அவலச் சாவு தம்மை
நெருங்குவதை அறிந்திருந்தும்
உரிமைக்கான பயணத்தில்
உத்வேகம் குறையாத உத்தமர்களே...

உங்களை நெஞ்சிருக்கும் வரை மறவோம்..
முகவுரை எழுத முன்னரே
முடிவுரை எழுதி
அந்தரித்துப் போன ஆத்மாக்கள்

இன்னமும் அழியவே இல்லை
அவர்கள் எம் மத்தியில்
ஏதோ ஒரு வடிவில்
இன்னமும் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறார்கள்...

ஞாயிறு, 8 மே, 2011

அம்மாவுக்காக...

ஞாயிறு, 1 மே, 2011

மேன் மக்கள் தினம்...!


தொழிலாளர் தினம்...
மேன்மைமிகு உழைப்பாளர்களை
மேதினியில் ஏற்றிப் போற்றும் தினம்...
பாலையை சோலையாக்கி பாரினை
உரமாக்கும் மேன்மக்கள் தினம்...

உரிமைக்காக குரல் எழுப்பி
உழைப்புக்கு வழி தேடி
தொழிலாளர்கள் ஒன்றிணைந்த இந்நாளில்
உழைப்பு என்னும் உளியால்
உலகை மாற்றியமைத்த உத்தமர்கள் புகழ் பாடும்...

விடா முயற்சியுடனே வியர்வைத் துளிகளும் சேர்த்து
நம்மூர் விளை நிலங்களை உழுது சமப்படுத்தி
திரைகடல் கடந்து திரவியம் தேடி
நம் தேசத்தின் பொருளாதாரத்தை வளம் படுத்துவோம்...

உழைப்பாளர் நலம் பெறவும்
ஊதியம் சரிவர கிடைத்திடவும்
உற்ற துணையாய் என்றும் இருந்திடும் இத்தினம்...

உழைப்பாளர் பெருமையை இந்த உலகம் முழுவதும்
பறை சாற்றுவோம் இப்பொன் நாளில்...