You are
person read this...
நட்பென்ற இனிய சோலையிலே
நடை பயின்று நாம் இருவரும்
இன்று பிரிவென்ற
மூன்றேழுத்தால்
பேதலித்து நிற்கின்றோம்...
உன்னைக் காணாத
என் முகம் இன்று
திருந்தி இருந்தும்
எரியாத விளக்காக
பிரகாசிக்க மறுக்கின்றது!
அன்பு என்ற பாலைவனத்தில்
திசை தெரியாப் பறவைகளாய்
நாமிங்கு...
அடுத்த பிறப்பென்று
ஒன்றிருந்தால்
மேகத்தில் ஒன்றாக
நானும் நீயும் சந்திப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக