You are
person read this...
மனிதரைக் காதலித்தால்
வருவதெல்லாம்
துன்பம் தான்
அதனால் தான்
நான் இப்போது
கடவுளைக் காதலிக்க
ஆரம்பித்திருக்கிறேன்
இன, மொழி
சாதி வேறுபாடு எதுவும்
என் காதலுக்கில்லை
காமம் கடந்த என் காதல்
உருவமில்லாதது
ஆனால்
சுதந்திரமானது...!
உறவுகளின் எதிர்ப்புகள்
எதுவுமற்ற என் காதல்
உண்மையானது
புனிதமானது
என் காதலை எவராலும்
எளிதில் உணர்ந்து
கொள்ள முடியாது
ஏனெனில் இது
மனித ஆசைகள் உணர்வுகள்
அனைத்திற்கும்
அப்பாற்பட்ட
தெய்வீகக் காதல் !
குறிஞ்சிக் கவி செ. ரவிசாந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக