You are
person read this...
மாசித்திங்கள் மக நட்சத்திரத்திருநாள்
மக்கள் பாசப் பற்றறுக்கும்
மகேசன் பெருநாள்!
வருணனின் பிரம்மஹத்தி தோஷப் பீடிகையை
விட்டொழிக்கவென்று
தேவர் வேண்டி நின்ற போது
கருணையே வடிவான
கருணாமூர்த்தி நின்
கடைக்கண் பார்வை
பெற்றருள் பெற்ற நன்னாள்!
கணக்கில்லா ஆசைதனை
விதைத்து நின்று
திசையில்லா வாழ்வதனைத்
திருப்தியென்று
பாசத்த்ழைகளுள் தினமும்
சிக்கித் தவித்தே
பாரிய வாழ்வதன் பொருளறியாது
மாளுவர் ஆயிரம்
மானிடர் தினம்.
பெரியவர் இவர்
சிறியவர் அவர் என்றே
அகந்தனில் மமதை கொண்ட
மானிடரின் சிந்தை
தெளியவென்று சிறப்புற்ற ஒருநாள்
மாதொரு பாகனின் மலர் பாதம் பற்றி
மாசிமகத் திருநாளில் அவனருள் பெற்றிட
பாசமாம் “பற்றறுத்துப் பாரிக்குமாரியவன்”
மோட்சம் பெற்றுயர
சாந்தியும் சமாதானமும்
தழைத்தோங்க
வேண்டி வழிபடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக