You are
person read this...
மார்ச் 08 பெண்கள் தினத்தை முன்னிட்டு.........
கல்விக் கண் திறக்கச் செய்வோம்
கசடுகளை ஓயச் செய்வோம்
முகில்களைக் கிழிக்கச் செய்வோம்
முறம் கொண்டு எழுந்து நிற்போம்
விண்வெளியில் களமமைப்போம்
மண்ணுலகைப் பொன்னுலகாக்குவோம்
பூவையரின் விழி நீரைப்
புயலாக மாறச் செய்வோம்
பொங்கியெழுந்தே புதியதோர்
சரித்திரம் படைப்போம்
கொழுந்து பறிக்கும் கைகளைக்
ஏட்டைப் பிடிக்கச் செய்வோம்
பானை பிடிக்கும் கைகளால்
பாரை வாழ வைப்போம்
நெஞ்சத் துணிவு கொண்டு
நீதிக்காய்த் தினம் உழைப்போம்
தொட்டிலாட்டும் கைகளால்
நாட்டைக் கட்டியாளச் செய்வோம்
வெட்டிப் பிளந்தாலும்- பெண்
விடுதலைக்காய் போராடுவோம்.
5 கருத்துகள்:
//கொழுந்து பறிக்கும் கைகளைக்
ஏட்டைப் பிடிக்கச் செய்வோம்//
இன்னமும் பாரதி காலத்தில்தான் இருக்கீங்க போல :-)
பாரதி எக்காலத்திற்குமே ஏற்ற கவிஞன் அண்ணா .....
அவரோட அன்றைய பெண் விடுதலைக் கனவு அரசியலிலும் இப்போ தான் நிறைவேறுது...
நல்லாயிருக்கு....
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். உழவன், ஐந்திணை.
கருத்துரையிடுக