சனி, 13 பிப்ரவரி, 2010

காதலின் உயர்வு

You are person read this...

பார்த்தவுடன் வருவது தான் காதல்
பழகியபோது ஒருவரையொருவர்
புரிந்துகொள்வது தான் காதல்
பள்ளிக் காலங்களிலே
இடையிடையே வந்து போகும்
பசுமையான நினைவுகளே
இந்தக் காதல்.

துள்ளித் திரியும் வேளை தன்னில்
சுமைகளையும் சுகங்களையும்
சொல்லித்தரும் சுதந்திர கீதமே காதல்.
பணத்தால் வருவதல்ல
உண்மைக்காதல்
பண்பு, பாசம், நேசம்
சுரக்கும் இன்ப
ஊற்றே காதல்.

கரும்பு போல இனிப்பதே காதல்
கனவுகள் காணும்
விந்தை உலகமே காதல்.
உள்ளமிரண்டும் இணைவதே காதல்
உயிருக்குள் உயிராகும்
உன்னதக் காவியமே
இந்தக் காதல்.

கண்களின் சந்திப்பினால்
கட்டுண்டுறச் செய்த காதல்
கற்பனைகள் ஆயிரம் காண
களமமைத்துத் தந்த
கருவூலமே காதல்!
பருவ இராகங்கள்
பல பாடிடும் காதல்
பாலைவனத்தையும்
பசுமையாக மாற்றும்
அற்புதச் சக்தியே காதல்.

காமம் கொண்டு பழகுவதல்ல காதல்
கனிவாக ஈருயிரும் கலந்துலாவும்
தேசியகீதமே காதல்.
இரு உள்ளங்களின்
மொழியே காதல்.
வாலிபத்தின்
வைர நினைவுகளே காதல்.
வற்றாத இன்ப ஊற்றே காதல்.

ஏமாற்றுவதற்கல்ல காதல்
ஏணியாய்த் தினம்
துணையிருப்பதே காதல்
சொன்னால் இனிமை காதல்
சுகமாய்ச் சிரிப்பதே காதல்
கரும்பு போல இனிப்பது
தான் காதல்
கவி புனைய எமக்குக்
கற்றுத்தந்த ஆசானே காதல்
இளமைக் காலத்தின்
அழியாப் பக்கமான காதலே
என்றும் வருவாய்
எம் துணையாக.....

2 கருத்துகள்:

thiyaa சொன்னது…

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

ரவிசாந் சொன்னது…

நன்றி தியா அண்ணா. தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் .