You are
person read this...
ஏசியில் வாழ்கின்ற
வாழ்க்கையது வேண்டாம்.
ஓசியில் கிடைக்கின்ற
நிவாரணமும் வேண்டாம்.
இடைஞ்சல்கள் ஏற்படுத்துகின்ற
இனவெறியும் வேண்டாம்.
மனங்களை மழுங்கடிக்கின்ற
மதவெறியும் வேண்டாம்.
மனிதனை விலங்காக அலைய விடும்
பணமும் வேண்டாம்.
பாடாய்ப் படுத்தும்
பதவிகளும் வேண்டாம்.
உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும்
போலி உறவுகளும் வேண்டாம்.
உறவுகளைப் பிரிக்கும் இந்தக்
காதலும் வேண்டாம்.
அல்லல் பட்டு வாழும்
அகதி வாழ்க்கையும் வேண்டாம்.
அழிவினை ஏற்படுத்துகின்ற
யுத்தமும் வேண்டாம்.
எம் தாய் நாட்டில்
நிம்மதியாய் நாம் வாழ
நிரந்தர சமாதானம் மட்டும்
வேண்டும்.... வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக