சனி, 17 ஏப்ரல், 2010

கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்.

You are person read this...

[அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் விக்ருதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19/04/2010ம் திகதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.

வீரமனைப் பதி வாழும் வீரத் தாயே கௌரியம்மா....!
வீரமனைப் பதி வாழுகின்ற
வீரத் தாயே - எம்
வேண்டுதலுக்குத் தலை சாய்க்க
வேண்டுமம்மா.
காலை மாலை உன் பாதம்
பணிகின்றேன்.
வேளை நல்ல வேளையாக
வேண்டுகின்றேன்.

ஆகாதது ஏதுமுண்டோ
வாழ்விலே
அவல வினை அகன்றிடும்
நொடியினிலே
ஓடித் துயரகலும் உன் வாசற்படி
கடந்தால்
உயர்வு பலவும்
அடைவோம் நாம்

பக்தியுடன் என்றும் போற்றிடவே
பலமும் நலமும்
எமக்கு அருள்பவளே!
குப்பிளான் பதியின் குன்றென
மிளிர்ந்து குறை யாவும்
போக்கிஎமைக் காப்பவளே!

உள்ளத்திலே தினம் உன்னைப்
பரவி வழிபடவே
ஊனங்கள் யாவும்
எமை விட்டு விலகிடுமே
கன்னிமார்த் தாயின்
பாதங்களைத் தினம்
தொழுதேற்றவே
கன்ம வினை யாவும்
தொலைந்திடுமே!

சித்திரை தோறும் உன்
மகோற்சவம் காண
திரண்டு வரும்
அடியார் கூட்டம்
சீர் பெருக்கவே - உன்
திரு வீதி வலம் வந்து
திருப்பேறுடன் அருட்பேறும்
பெற்றிடுவர்.

நம்பினோர் கெடுவதில்லை
நம்பியே நாமுன்னைச்
சரணடைந்தோம்
சூலம் பிடித்து வந்து
துயர் யாவும் போக்கி
எமைக் காத்திடம்மா
வேப்பிலை ஏந்தி வந்து - எம்
வெவ்வினையை நீ
களைந்திடம்மா!

கருத்துகள் இல்லை: