வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதியதோர் உலகம் செய்வோம்.

You are person read this...

உழைக்கும் கரங்களே உங்களின் கரங்களை நம்பியே இந்த உலகம்
[உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு... மே 01]


புதியதோர் உலகம் செய்வோம் - அதனைப்
புரிந்துணர்வுடன் பகிர்ந்து கொள்வோம்
புத்துணர்ச்சியுடன் வாழ்ந்தே இவ்வுலகைப்
புனித பூமி ஆக்கிடுவோம்

சாதி சமயங்களும் வேண்டாம் - தினமும்
சண்டை சச்சரவும் வேண்டாம்
சாதியை ஒன்றாய் ஆக்கி - நல்ல
சாதனையொன்று நாம் சமைப்போம்.

முதலாளி தொழிலாளி என்ற
முதலை தனையே ஒழித்திடுவோம்.
மமதை அற்று மானிடராய் வாழ
மாற்று வழியை நாமென்றும் நாடிடுவோம்.

இன மத மொழி வேறுபாட்டை
இன்றே நாம் களைவோம்.
ஏழை எளிய மக்களிடம்
இறக்கம் நாம் காட்டிடுவோம்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை நாம் கொளுத்திடுவோம்.
மானமுள்ள மனிதராய் வாழ
என்றும் நாமே முயன்றிடுவோம்.

பாட்டாளி வர்க்கம் உயர்ந்திடவே
பாட்டுக்கள் நாமும் புனைந்திடுவோம்.
உழைக்கும் மக்கள் உயர்ந்திடவே
ஊன்றுகோலாய் நாம் இருந்திடுவோம்.

கருத்துகள் இல்லை: