You are
person read this...
மாசித்திங்கள் தன்னில்
மாசறு மாதொரு பாகனை
மனதிலெண்ணி
கார் இருள் முழுதும்
கண் விழித்தவன்
கருணை பெறும்
காலமிதுவன்றோ!
படைப்பவன் பிரம்மாவும்
காப்பவன் விஷ்ணுவும்
கணத்தில் தமக்குள்
கணக்கில்லாப் பெருமையுடன்
சோதியவன் பாதமும்
சிரமும் தேடிய இன்னாள்
மானிடரின் மனக்கிலோசமொழித்து
மகிழ்வூட்டும் விரதப்பெருநாள்.
மானிடராய்ப் பிறந்தவுன்
பற்றினைப் பற்றறச்செய்து
மகாதேவன் அவன் புகழ் கூறிப்
போற்றிப் பணிந்து
மனம் வாக்கு காயமதில்
நிலை நிறுத்தி
மாசிலாப் பேறெய்தும்
மகத்தான திருநாள்!
மாந்தரெல்லாம் உடல் துலக்கி
மலர் அள்ளி
நடராஜன் பெயர் சொல்லி
ஊனுருக்கி உள்ளொளி பெருக்கி
வாழ்வதன் பேறெய்தும் ஒருநாள்
மகேசனவன் புகழ் பாடி
மகிழும் இராத்திரி
மகாசிவன் பெருமை கூறும்
மகாசிவராத்திரியாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக