செவ்வாய், 15 செப்டம்பர், 2009

உலகுக்கு ஒளி தருவாயா ஒபாமா!

You are person read this...

காலமெல்லாம் கடைத்தேற முடியாத

கறுப்பின மனிதரைக்

காத்திடவென்று பிறந்த

மார்ட்டின் லூதர் கிங் போல்

மால்கம் எக்ஸ் போல்

மார் தட்டிக் கறுப்பினம் மகிழவென

பாரினில் வந்துதித்த ஒபாமாவே

உன்

கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்கும்

ஒடுக்கப்பட்ட சிறு இனங்கள்

உன் வரவில் களிப்படைகிறதே

காத்திடுவாய் என்று காத்திருக்கும்

கடைத்தள்ளிய மக்களனைவரினதும்

கனவுகள் நனவாகும்

ஒரு நாள் நீ அரங்கேறிய திருநாள் அன்று

விழி பூத்திருக்கும் எங்களுக்கு

ஒளியூட்டுவாயோ இல்லை

வெள்ளினம் போல் நீயும் திரும்புவாயோ

ஆப்ரகாம் லிங்கனை அடியொற்றி

அரசேறும் உன் பாதை

மக்கள் நலன் காக்க வழி சேர்க்குமா?

2 கருத்துகள்:

thiyaa சொன்னது…

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்
பொறுத்திருந்து பார்ப்போம்

Unknown சொன்னது…

Ravishanth realy u r great.U have wonderfull future_Aniththa Akka