செவ்வாய், 15 செப்டம்பர், 2009

காப்போம் பிள்ளைகளை

You are person read this...


வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை
உள்ளதைச் சொல்லும் நல்ல பிள்ளை
உணர்ந்தால் உலகத்தில் நல்ல உள்ளம்
உவந்தால் உன்மத்தம் ஆகும் எம் உள்ளம்
கள்ளமில்லா உள்ளத்தின் தாகம் - அதை
கண்டு தீர்ப்பது எம் விவேகம்
காயம் இல்லாத அதன் வேகம்
காப்பது நம் அனைவரது விவேகம்!

சொல்ல நினைக்கும் அவ் உள்ளத்தின்
உணர்வுகளை உணர்ந்தால் அது நம் விவேகம்
காயம் படாது காப்பது நம் கடமை
கண்ணிமை போல் பார்ப்பது நம் உடமை
பிள்ளைகளே உயர் செல்வம் உலகில் - அதை
பூரிக்கப் பார்ப்பது பெரியோர் கடமை!

அன்பினால் ஆவது எதும் இல்லை
ஆரத் தழுவி அரவணைப்பது ஏது தொல்லை?
இல்லை இல்லை உலகில் செல்வம்
உண்டு என்பது பிள்ளைச்செல்வம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அளவில்லா அன்பை கொடுப்பதே நம் கடமை
ஆசைக்கும் உண்டாமோ அளவில்
அரவணைத்தால் உணரும் அன்பு உள்ளம்.

1 கருத்து:

thiyaa சொன்னது…

நல்ல அறிவுரையுடன் கூடிய கவிதைக்கு வாழ்த்துக்கள்