ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சமாதானம் மலரவே பொங்கட்டும்.

You are person read this...

போர்வெறி நீங்கவே பொங்கட்டும்
புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்
மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்.

மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்
ஒற்றுமையுடன் வாழவே பொங்கட்டும்
ஒரணி சேரவே பொங்கட்டும்
சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்.

சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்
பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமியெங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்
ஏற்றத்தாழ்வு இல்லாதொழியவே பொங்கட்டும்.

எங்களின் வாழ்வு செழிக்கவே பொங்கட்டும்
ஏர் பூட்டி மக்களெல்லாம் உழவு செய்திடவே பொங்கட்டும்
இன்றே எமக்கு விடிவு கிடைக்கவே பொங்கட்டும்
சர்க்கரையோடு தேன் பயறுஞ்சேர்த்து
மெத்தக் கலந்திங்கு பொங்கட்டும்.

புத்தரிசியோடு புதுப்பாலும் சேர்த்துப்
பொன் வெல்லப் பொங்கல் பொங்கட்டும்
பல் தொழில் பெருகி பல வளமும் பெருகவே
பாங்குடனே மக்களனைவரும் பொங்கட்டும்.

சண்டைகள் நீங்கிடவே பொங்கட்டும்
சாதிகள் ஒழிந்திடவே பொங்கட்டும்
சமரசம் நிலவிடவே பொங்கட்டும்
சமதர்மம் கிடைத்திடவே பொங்கட்டும்.

சக்தி பிறந்திடவே பொங்கட்டும்
சம உரிமை கிடைத்திடவே பொங்கட்டும்
புத்தி மிகுந்திடவே பொங்கட்டும்
பூமியில் மக்களனைவரும் அமைதியுடன் வாழவே பொங்கட்டும்
சகோதரத்துவம் நிலைத்திடவே பொங்கட்டும்
சாந்தியோடு சமாதனம் மலரவே பொங்கட்டும்.

கருத்துகள் இல்லை: