புதன், 30 நவம்பர், 2011

மறுபடியும் நனைந்தேன் ...!!

You are person read this...


மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா

"சளி பிடிச்சிகிட்டு
செலவு வைக்கப்போற பாரு"
என்றார் அப்பா..

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!!!

(படிச்சதில பிடிச்ச கவிதை ஒன்று....)

கருத்துகள் இல்லை: