செவ்வாய், 3 ஏப்ரல், 2012
காத்திருப்பு !
உனக்காக காத்திருப்பது
நான் மட்டுமல்ல
உனது நினைவுகளைச்
சுமக்கும்
எனது இதயமும் தான் !
காத்திருக்கும் காதல்
சுகமானது
காலமெல்லாம்
காக்க வைக்கும்
காதல் ரணமானது !
காத்திருப்போம்
காதலிப்போம்
காதல் உலகம் கண்டு
மகிழ்வோம் !
திங்கள், 2 ஏப்ரல், 2012
என் காதல் தேசம் !
என்னைப் பார்த்துப்
பலரும் கேட்கிறார்கள்
நீ யாரையாவது
காதலிகிறாயா என்று!
எப்படிப் புரியவைப்பேன்....?
என் இதயத்தில்
கோயில் கட்டி
பூஜை செய்யும்
என் உயிர் காதலி
அழகிய என் தேசமென்று...!
மீண்டும் சந்திப்போம்!
நட்பென்ற இனிய சோலையிலே
நடை பயின்று நாம் இருவரும்
இன்று பிரிவென்ற
மூன்றேழுத்தால்
பேதலித்து நிற்கின்றோம்...
உன்னைக் காணாத
என் முகம் இன்று
திருந்தி இருந்தும்
எரியாத விளக்காக
பிரகாசிக்க மறுக்கின்றது!
அன்பு என்ற பாலைவனத்தில்
திசை தெரியாப் பறவைகளாய்
நாமிங்கு...
அடுத்த பிறப்பென்று
ஒன்றிருந்தால்
மேகத்தில் ஒன்றாக
நானும் நீயும் சந்திப்போம்!
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
ஞானம்...!!
ஞானம் பெற்றது
நீ
உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்...
நான்
என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்...
-காசி ஆனந்தன்-
வியாழன், 22 மார்ச், 2012
செல்லாத நோட்டு!
சின்னப் பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேரூந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக் கொண்டேன்...
கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்...
நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கி விட்டு
ஓட்டுனருக்கு
ரே... ரே... சொன்னார்
நடத்துனர்...
வேகமெடுத்தது பேரூந்து
பூம்.. பூம்... பூம்...
-அ. நிலாதரன்-
வியாழன், 12 ஜனவரி, 2012
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்..!!
புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்
மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்
மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்
ஒற்றுமையுடன் இருக்கவே பொங்கட்டும்
ஓரணி சேரவே பொங்கட்டும்
சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்
சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்
பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமி எங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்.
என் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...
-குறிஞ்சிக்கவி செ: ரவிசாந் -
சனி, 24 டிசம்பர், 2011
முதலிலிருந்து மீண்டும்...!!
முதலில்
உனது பெயரைத் துடைத்தழி,
உனது வருடங்களைக் கட்டவிழ்த்துவிடு
உனது சுற்றுப்புறங்களை அழித்துவிடு,
நீ எதைப் போலிருக்கிறாயோ அதையும்,
எஞ்சியிருப்பதையும் வேரோடு பிடுங்கு,
பிறகு,
உனது பெயரைத் திரும்ப எழுது,
உனது வயதை மீட்டுப் பெறு,
உனது வீட்டை மறுபடி கட்டு,
உனது பாதையில் நட,
அதன் பிறகு
முடிவற்று,
தொடங்கு, முதலிலிருந்து மீண்டும்...!!
- எகிப்து ஆண்ட்ரி செடிட் -
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தேடு
என்னைப் பற்றி
ரவிசாந்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இடுகைகள்
ஆன்மீகம்
(4)
இரங்கற்பா
(2)
ஈழம்
(1)
கட்டுரை
(3)
கவிதை
(23)
காணொளி
(2)
படித்ததில் பிடித்தது
(12)
வாழ்த்துக்கள்
(6)
பதிவுகள்
▼
2012
(10)
▼
ஏப்ரல்
(8)
சித்திரையாளே சிரித்து வாடி.....!
ஒரு பெண்ணின் உணர்வுகள் !
தெய்வீகக் காதல்
நட்பு பிரியும் தருணம்
காத்திருப்பு !
என் காதல் தேசம் !
மீண்டும் சந்திப்போம்!
ஞானம்...!!
►
மார்ச்
(1)
►
ஜனவரி
(1)
►
2011
(14)
►
டிசம்பர்
(1)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(1)
►
ஜூலை
(1)
►
மே
(3)
►
ஏப்ரல்
(1)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(1)
►
ஜனவரி
(2)
►
2010
(26)
►
டிசம்பர்
(1)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(2)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூலை
(1)
►
ஏப்ரல்
(6)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(3)
►
2009
(7)
►
டிசம்பர்
(1)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(2)
►
செப்டம்பர்
(3)
வருகையாளர்கள்
Poker
FX
bingo online
Spielautomaten
Casino
Counters
திரட்டிகள்
மரத்தை நட்டு அதைப் பாதுகாப்போம்.
உலகின் பல்வேறு நாடுகளின் நேரங்கள்.
கிரிக்கெட் நேரடி தகவல்கள்.
தமிழ்ப் பாட்டுக் கேட்க
மவுஸ் மூலம் ட்ரமை இசைத்து மகிழுங்கள்.
அழகான மீன் தொட்டி
பார்வையாளர்களின் நாடுகள்
Feedjit Live Blog Stats