ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
தீர்த்தமாடி எம் வினை தீர்த்தருள்வாய்!
23/09/2010 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவையொட்டி எழுதப்பட்டு உதயன் நாளிதழில் பிரசுரமான கவிதை அப்படியே வலைப்பதிவு நண்பர்களுக்காக....
சனி, 17 ஏப்ரல், 2010
கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்.
[அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் விக்ருதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19/04/2010ம் திகதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.
வீரமனைப் பதி வாழும் வீரத் தாயே கௌரியம்மா....!
வீரமனைப் பதி வாழுகின்ற
வீரத் தாயே - எம்
வேண்டுதலுக்குத் தலை சாய்க்க
வேண்டுமம்மா.
காலை மாலை உன் பாதம்
பணிகின்றேன்.
வேளை நல்ல வேளையாக
வேண்டுகின்றேன்.
ஆகாதது ஏதுமுண்டோ
வாழ்விலே
அவல வினை அகன்றிடும்
நொடியினிலே
ஓடித் துயரகலும் உன் வாசற்படி
கடந்தால்
உயர்வு பலவும்
அடைவோம் நாம்
பக்தியுடன் என்றும் போற்றிடவே
பலமும் நலமும்
எமக்கு அருள்பவளே!
குப்பிளான் பதியின் குன்றென
மிளிர்ந்து குறை யாவும்
போக்கிஎமைக் காப்பவளே!
உள்ளத்திலே தினம் உன்னைப்
பரவி வழிபடவே
ஊனங்கள் யாவும்
எமை விட்டு விலகிடுமே
கன்னிமார்த் தாயின்
பாதங்களைத் தினம்
தொழுதேற்றவே
கன்ம வினை யாவும்
தொலைந்திடுமே!
சித்திரை தோறும் உன்
மகோற்சவம் காண
திரண்டு வரும்
அடியார் கூட்டம்
சீர் பெருக்கவே - உன்
திரு வீதி வலம் வந்து
திருப்பேறுடன் அருட்பேறும்
பெற்றிடுவர்.
நம்பினோர் கெடுவதில்லை
நம்பியே நாமுன்னைச்
சரணடைந்தோம்
சூலம் பிடித்து வந்து
துயர் யாவும் போக்கி
எமைக் காத்திடம்மா
வேப்பிலை ஏந்தி வந்து - எம்
வெவ்வினையை நீ
களைந்திடம்மா!
திங்கள், 1 மார்ச், 2010
பாசந்தனை பற்றறுக்கும் மாசி மகத் திருநாள்!
மாசித்திங்கள் மக நட்சத்திரத்திருநாள்
மக்கள் பாசப் பற்றறுக்கும்
மகேசன் பெருநாள்!
வருணனின் பிரம்மஹத்தி தோஷப் பீடிகையை
விட்டொழிக்கவென்று
தேவர் வேண்டி நின்ற போது
கருணையே வடிவான
கருணாமூர்த்தி நின்
கடைக்கண் பார்வை
பெற்றருள் பெற்ற நன்னாள்!
கணக்கில்லா ஆசைதனை
விதைத்து நின்று
திசையில்லா வாழ்வதனைத்
திருப்தியென்று
பாசத்த்ழைகளுள் தினமும்
சிக்கித் தவித்தே
பாரிய வாழ்வதன் பொருளறியாது
மாளுவர் ஆயிரம்
மானிடர் தினம்.
பெரியவர் இவர்
சிறியவர் அவர் என்றே
அகந்தனில் மமதை கொண்ட
மானிடரின் சிந்தை
தெளியவென்று சிறப்புற்ற ஒருநாள்
மாதொரு பாகனின் மலர் பாதம் பற்றி
மாசிமகத் திருநாளில் அவனருள் பெற்றிட
பாசமாம் “பற்றறுத்துப் பாரிக்குமாரியவன்”
மோட்சம் பெற்றுயர
சாந்தியும் சமாதானமும்
தழைத்தோங்க
வேண்டி வழிபடுவோம்.
வியாழன், 11 பிப்ரவரி, 2010
சிவனுக்குகந்த சிவராத்திரி விரதம்.

மாசித்திங்கள் தன்னில்
மாசறு மாதொரு பாகனை
மனதிலெண்ணி
கார் இருள் முழுதும்
கண் விழித்தவன்
கருணை பெறும்
காலமிதுவன்றோ!
படைப்பவன் பிரம்மாவும்
காப்பவன் விஷ்ணுவும்
கணத்தில் தமக்குள்
கணக்கில்லாப் பெருமையுடன்
சோதியவன் பாதமும்
சிரமும் தேடிய இன்னாள்
மானிடரின் மனக்கிலோசமொழித்து
மகிழ்வூட்டும் விரதப்பெருநாள்.
மானிடராய்ப் பிறந்தவுன்
பற்றினைப் பற்றறச்செய்து
மகாதேவன் அவன் புகழ் கூறிப்
போற்றிப் பணிந்து
மனம் வாக்கு காயமதில்
நிலை நிறுத்தி
மாசிலாப் பேறெய்தும்
மகத்தான திருநாள்!
மாந்தரெல்லாம் உடல் துலக்கி
மலர் அள்ளி
நடராஜன் பெயர் சொல்லி
ஊனுருக்கி உள்ளொளி பெருக்கி
வாழ்வதன் பேறெய்தும் ஒருநாள்
மகேசனவன் புகழ் பாடி
மகிழும் இராத்திரி
மகாசிவன் பெருமை கூறும்
மகாசிவராத்திரியாமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
